wfs
- சிறுகதைத்தொகுப்பு

விமர்சனங்கள் 11


போரும் புனைவும்

புலம்பெயர்ந்த எழுத்தாளர் அகிலின் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. ஈழத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர் யுத்தத்தைத் தாண்டி சிந்திப்பதென்பது இனி முடியாது என்றே தோன்றுகிறது. அவர்கள் ஏதோ ஒருவிதத் தில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் போர் நெறியைக் கொஞ்சமும் பின்பற்றாத ஈழத் தில் நடந்த மனிதாபமற்ற போர்ச்சூழலையே பேசுகிறது. குறிப்பாக இரண்டு கதைகள் இதில் மிக முக்கியமானவை. அதிலொன்று, ‘பதவி உயர்வு’. இக்கதை யுத்தத்தைத் நேரிடையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும் யுத்தத்தின் இழப்பு பெரியது அளவிட முடியாதது என்பதை உணர்த்து கிறது. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவாக அமையும் இக்கதை, இலங்கை இராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் தந்தைக்கு மகனின் இழப்பு அறம் போதிப்பதாக அமைகிறது. மகன் ஒரு தமிழ் இளைஞனுடன் நட்பு வைத்திருப்பதை விரும்பாத தந்தை, மகன் இறந்து போன பிறகு போரை வெறுப்பதாக புனையப்பட்டுள்ளது. இக்கதை சிறுவயதில் படித்தபோரை வெறுத்த அசோகன்என்ற பாடத்தை நினைவுபடுத்துகிறது. ஒரு தேர்ந்த சிறுகதை வாசிப்பாளன் இக்கதையில் பிரச்சார தொனி வெளிப்படை யாக இருப்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவான் என்பதை யும் மறைப்பதிற்கில்லை.

இத்தொகுப்பின் ரத்தமும் சதையுமான கதையாக இருப்பது தொகுப்பின் தலைப்புக் கதையானகூடுகள் சிதைந்த போதுஎன்ற சிறுகதைதான். போரின் உக்கிரத்தை அதன் தளத்திலிருந்து சொல்லும் இக்கதையை ஒரு புனைவாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. தன் மனைவி, அவள் வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை என எல்லாவற்றையும் இழந்த ஒருவன் கனடாவிற்குப் புலம்பெயர்கிறான். சாலையில் அடிபட்டு துடித்துக்கொண்டிருக்கும் குருவியைக் காணும்போது இவனுக்கு இவனுடைய குடும்பம் நினைவுக்கு வருகிறது. சங்க இலக்கியத்தில் இந்த உத்தியை அகத்திணையில் பெரும்பான்மையானப் புலவர்கள் கையாண்டிருப்பார்கள் . பேரா. கா. சிவத்தம்பி இந்த உத்தி குறித்து தொகுப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார். இப்புனைவைப் போன்று அந்த மண்ணிலிருந்து பல உருவாகியிருந்தாலும் நிறைய இடங்களில் இப்புனைவு வேறுபடுகிறது. போரின் காரணமாக ஏற்பட்ட இழப்பை இக்கதை வர்ணிக்கவில்லை என்பதே இப்புனைவின் சிறப்பு என்று கூறலாம். பேரா. கா. சிவத்தம்பியின் முன்னுரை தொகுப்பைக் குறுக்கு வெட்டாக ஆராய்கிறது. இது தொகுப்பிற்குக் கூடுதல் சிறப்பு.

நன்றி:
அடவி (ஆகஸ்டு - செப்டம்பர் 2012)
சு. இரமேஷ்





வானத்தில் தோன்றும் மின்னல் அடுத்து பூமியில் தட்பவெப்பத்தில் என் மாறுதல்களை ஏற்படுத்தும் என்று சொல்லாமல் சொல்லி மறைந்துவிடும். அதுபோல சிறுகதையின் முடிவும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பார்கள். அப்படி இருக்கிறது இந்த நூலிலுள்ள பெரும்பாலான கதைகள்.


- நன்றி: குமுதம் சிநேகிதி (ஏப்ரல் 16-30, 2012)